ஞாயிறு, 17 ஜூன், 2012

விண்ணுலகப் பயணம்


விண்ணுலகப் பயணம்

அகில உலகின் அருட்கொடை எம் பெருமான் முகம்மது(ஸல்) அவர்கள் தமக்கு நபித்துவம் கிடைத்தபின் மார்க்க அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தார்கள், ஏக இறைக் கொள்கையை அன்றய மக்கத்துக் காஃபிர் ஏற்க மறுத்துக் கொண்டிருந்தார்கள். பல இன்னல்களுக்கிடையே தளராமல் ஏகத்துவக் கொள்கையை ரஸீல் (ஸல்) அவர்கள் பரப்பி வந்தார்கள். அப்பொழுது தான் இறைவனிடமிருந்து விண்ணுலக அழைப்பு வந்தது. இறைவன் திருமறையில் பனி இஸ்ராயில் அத்தியாயத்தில் 17:1 ஆயத்தில் பெருமானாரின் விண்ணுலகப் பயணத்தைப் பற்றிக் கூறுகிறான்.
‘(அல்லாஹ்)மிகப் பரிசுத்தமானவன், (முகம்மது(ஸல்)) தன் அடியாரை (சிறப்புற்ற பள்ளியிலிருந்து(கஃபா) மஸ்ஜில் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்(அவ்வாறு அழைத்துக் சென்று) நாம் அதனை சூழ உள்ள பூமிகளை ஆசிர்வதித்துள்ளோம், நம்முடைய திருஷ்டாந்தாங்களைகளை அவருக்கு காண்பிப்பதற்க்காகவே (அழைத்துக் சென்றோம்) நிச்சயமாக (உமதிறைவனாகிய) அவனே செவியுறுவோனும், உற்று நோக்குபவனாகவும் இருக்கிறான்.
சர்வ வல்லமைப் படைத்த ரஹ்மான் நபி(ஸல்) அவர்களின் விண்ணுலக பயணம் பற்றிய நிகழ்வை இந்த ஆயத்தில் கூறுகிறான், நபி (ஸல்) அவர்களை மக்காவிலிருந்து 40 இரவுகள் ஒட்டகையை ஓட்டினால் கடக்கும் தூரத்திற்கு அழைத்துக் சென்று, அங்கிருந்து விண்பயணத்திற்கு அழைத்துக் சென்றிருக்கிறான், ரஸீல் (ஸல்) வாழ்ந்துக் கொண்டிருப்பது மக்கா, மார்கப் பிரச்சாரம் செய்துக் கொண்டிருப்பது மக்கா, அல்லாஹ் நினைத்திருந்தால் கஃபத்துல்லாவிலிருந்தோ, நபி (ஸல்) அவர்களின் வீட்டு வாசலிருந்தே விண்ணுலப் பயணம் அழைத்துக் சென்றிருக்க முடியும் அப்படியிருந்தும் ஏன் அவர்களை மக்காவிலிருந்து அவ்வளவு தூரம் அழைத்துச் சென்று விண்ணுலப் பயணம் நடந்து?
இதை நாம் கொஞ்சம் கூர்ந்து நோக்கினால், நுண்ணறிவாளனாகிய அல்லாஹ் ஒரு விசயத்தை உலக மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டி, என்ற உண்மை தெரிய வரும் நபி (ஸல்) அவர்களை ஜிப்ரயில் மூலம் ஏழு வானங்களையும் தாண்டி அழைத்துக் செல்கிறார்கள் இறைவனை சந்திப்பதற்கு, ஒவ்வொரு வானத்திலும் நடக்கும் நிகழ்ச்சிகளை நபி (ஸல்) அவர்கள் தெளிவாக ஹதிஸில் விளக்குகிறார்கள், அந்த நிகழ்வுகளையும் பெருமானாரின் விண்ணுலகப் பயணத்தையும் ஏற்க மறுக்கின்றனர்.
இது இயல்பு வானத்தில் நான் அதைப் பார்த்தேன், இதைப் பார்த்தேன் என்று சொன்னால் வானத்தை இதற்கு முன் யார் பார்த்திருகிறார்கள், அல்லாஹ்வும் அவனுடைய மலக்குகளும் நபி(ஸல்) அவர்களைத் தவிர யாரும் பார்த்தில்லை. அப்படியிருக்க அங்கு கண்டதை எப்படி நம்புவார்கள், இதை அறிந்து தான் அல்லாஹ் நபியவர்களை மக்காவிலிருந்து தொலை தூரம் இருக்கும் மஸ்ஜில் அக்ஸாவிலிருந்து அழைத்துக் சென்றான்.
அன்றய மக்கத்துக் காஃபிர்கள் வியாபார நிமித்தம் ஜெருசேலம் சென்றிருக்கின்றனர், நபியவர்கள் சில வினாடிகளில் அங்கு செல்வது சாத்திமே இல்லை,நபியவர்கள் தன் வாழ்நாளில் அங்கு சென்றவர்களுமல்ல. இது உண்மையா என்று அறிந்தக் கொள்ள அவர்கள் நபியவர்களிடம் அங்குள்ள சில அடையாளங்களைக் கேட்டனர் நபியவர்களும் சரியாகச் சொன்னார்கள், சில வினாடிகளில் இவர் இவ்வளவு தூரத்தை கடந்திருப்பாரானால் விண்ணுலகப் பயணும் சாத்தியமே என்பதை நிருபிக்க பிற்காலத்தில் ஒரு சாட்சி வேண்மென்தினால் தான் இறைவன் நபியவர்களை மஸ்ஜிதில் அக்ஸாவிலிருந்து விண்ணுலகப் பயணம் அழைத்துச் சென்றான்.
அல்லாஹ்வே மிக்க அறிந்தவனும் நுண்ணறிவாளனுமாக இருக்கிறான், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கிறான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக