திங்கள், 14 டிசம்பர், 2015

இயற்கையின் சோதனை




அணையிலலா வெள்ளம்
அடம் பிடித்து பாய
அல்லாடும் மனிதன்
எவனைக் காப்பது எதைக் காப்பது
திக்கு முக்காடும் வேளையில்
விடாது கருப்பு என்று
பொழிந்து தள்ளியது அடை மழை
மழையாக மென் தூற்றலாக
வரும் என்று எதிர் பார்த்தோம்
வானமே உடைந்தது போல்
கொட்டோ கொட்டென்று கொட்டியது மழை
இது நமக்கு வரமா/ சாபமா/ என்று
புரியாமல் தவித்தனர் மக்கள்
ஆனாலும் விடவில்லை மழை
நீயா நானா என்று போட்டி போட்டு
கொட்டித் தீர்த்து விட்டு
அடங்கி ஒடுங்கி ஒளிந்து கொண்டது
அதன் வருகையால் வ்ருந்தியோர் சிலரல்ல
எல்லோரும் ஒவொரு விதத்தில்
வருந்தித் தான் மீண்டுள்ளனர்
நாம் மனம் திருந்தி வாழ இதுவும்
இயற்கையின் சோதனை
இறைவனால் கொடுக்கப் பட்டதே

thanks
http://eluthu.com/kavithai/275290.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக