இறைமறையில், நபிவழியில் “இலவசம்” இயற்கையிடமுமில்லை, ஏகனிடமும் இல்லை! இஸ்லாத்திலுமில்லை!!
இலவசத்தை ஏதிர்பார்ப்பது, ஏற்பது பிச்சை எடுப்பதற்கு சமமானது. என்ற சுய மரியாதை இலக்கணத்தைக்கூட அறியா பொது மக்கள் உலகளவில் ஓரளவு இருந்தாலும் குறிப்பாக இந்தியாவில் மிக அதிகம். பொது மக்களின் அறியாமை சென்ற நூற்றாண்டு வரை ஆன்மீகவாதிகளின் மிக உயர்ந்த முதலீடாக இருந்தது. இன்றைய சமய ஆன்மீகவாதிகளுடன், மக்களாட்சியின் அரசியல்வாதிகளுக்கும் செல்வத்துடன் சேர்த்து ஆதிக்க ஆட்சிக்கு வரவும் முதலீடாகவுள்ளது. இயற்கையாக ஒரு நாட்டு மக்களின் நம்பிக்கைகள், சிந்தனைகள், உணர்வுகள், செயல்பாடுகள் பெரும்பாலும் அந்நாட்டின் சமய ஆன்மீகவாதிகளின் கைப்பிடியில் தான் உள்ளது. அதற்கு உரமிட்டு வளர்ப்பது அந்நாட்டை ஆளும் ஆட்சியதிகார அரசியல் வர்க்கம் தான் என்பதை அகில உலக சரித்திர சான்றுகள் சாட்சி பகர்கின்றன. யாசித்து, பிச்சை எடுத்து வாழ்வதையே வாழ்வாதாரமாகக் கொண்ட சமயவாதிகளை, ஏன்? கடவுளே யாசித்து, பிச்சை எடுத்து வாழ்ந்தார் என்ற அடிப்படை கொள்கைகளைக் கொண்ட இந்தியாவில் “இலவசம்” ஒரு தனி மனிதனின் சுய மரியாதை சம்பந்தப்பட்டது என்பது புத்தம் புதிய கருத்தாகும். எனவே நமது தலைப்பான “இலவசத்தை”ப் பற்றி இவ்வுலகில் வாழ அவசியமான உலகியல் ரீதியாகவும், அதனைத் தொடர்ந்து ஆன்மீக ரீதியாகவும் பார்ப்போம்.
“உழைப்பின்றி உயர்வில்லை” “உழைப்பே உயர்வு தரும்” என பாலர் பள்ளி முதல் பாடம் கற்று தரும் நாம் “இலவசம்” என்பது எவ்வித உழைப்புமின்றி, அதற்கான எவ்வித முனைப்பும், முயற்சியு மின்றி கிடைக்கும் வசதிகளில் வாழ்வதாகும். அது சோம்பேறிகளின் வாழ்வாகும் என்பதை அறியாமல் இலவசத்திற்கு அடிமையாவது மிகப் பெரும் பேதமையாகும். இப்பரந்த உலகில் பகுத்தறிவுள்ள மனிதன் சுய மரியாதையுடன் கண்ணியமாக வாழ பல்வேறு வாழ்வாதாரங்களை இயற்கை நமக்கு நல்கியுள்ளதை எவரும் மறுக்க முடியாது. இதனை ஏற்பவரே ஆன்மீகவாதி. இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் எதுவுமின்றி, நிர்வாணமாக, புறத்திரையற்ற நிலையில் பிறக்கிறான். பின்பு அவன் வளர, வளர அவனது முயற்சி, உழைப்புக்கொப்ப தன்னுடைய வாழ்வாதாரங்களை சுயமாக சம்பாதித்து பெயரும், புகழுடன் வாழ முற்படுகிறான்; வாழ்கிறான். அதுவே கண்ணியமான வாழ்வாக எல்லோராலும் ஏற்கப்படுகிறது.
பிச்சை எடுத்தோ, யாசித்தோ செல்வம் சேர்த்து வாழ்பவனை சமுதாயத்தில் ஒருவரும் மதிக்க மாட்டார்கள். அவனைக் கண்டு பெரும்பாலோர் நம்மிடமும் வந்து கை ஏந்துவானே! யாசிப்பானே!! பிச்சைக் கேட்பானே! என பயந்து விரண்டோடவே செய்வர். அவனுடன் உறவு கொள்வதையோ, தொடர்பு கொள்வதையோ விரும்பவே மாட்டார்கள். அதாவது இலவசத்தை எதிர்பார்ப்பவனுக்கும், ஏற்பவனுக்கும் முழு மனித சமுதாயத்தில் அவனுக்கான சுயமரியாதை, மதிப்பு கிடைக்கவே கிடைக்காது. பின் எப்படி சுயமரியாதையுடன் அவன் இச்சமுதாயத்தில் பெயரும், புகழுடன் வாழ முடியும். இதன் மூலம் இப்பரந்த உலகில் ரீதியாக இலவசத்தை எதிர்பார்ப்பவனுக்கும், ஏற்பவனுக்கும் முழு மனித சமுதாயத்தில் மதிப்பு, மரியாதையில்லை என்பது நிதர்சனமான சத்தியம்! உண்மை!! அனைவரையும் சீர்தூக்கி, பகுத்தறிந்து சிந்திக்க வேண்டுகிறோம்.
தனிமனித சுயமரியாதை ஏகனுக்கு சொந்தமானது!
இவ்வுலகில் பிறவி எடுக்கும் ஒவ்வொரு மனிதனும் ஏகனிறைவனின் முழுமையான பிரதிநிதி என்பது இயற்கை மார்க்கம் இஸ்லாம் கூறும் சத்திய வாக்கு. (பார்க்க: அல்-குர்ஆன்: 2:30) மனிதன் ஏகனின் பிரதிநிதி என்றால் அவனது சுயமரியாதை ஏகனின் சுய மரியாதை என்பதை எவரும் மறுக்க முடியாது. இதனை திருமறைக் குர்ஆன் கூறும் பாங்கினைப் பாருங்கள்:-
இவர்கள் கண்ணியத்தை தேடுகிறார்களா? நிச்சயமாக கண்ணியமெல்லாம் அல்லாஹ்வுக்கே உரியது. (அல்-குர்ஆன்: 4:139).அவர்கள் வர்ணிப்பதை விட்டும், கண்ணியத்தின் இரட்சகனான உம்முடைய இறைவன் தூயவன். (அல்-குர்ஆன்: 37:180எவன் சுயமரியாதை (இஷ்ஷத்தை) கண்ணியத்தை நாடுகிறானோ, அவன்,எல்லாக்கண்ணியமும் அல்லாஹ்வுக்கே உரியதாகும் (என்பதை அறிந்து கொள்ளட்டும்);தூய்மையானவாக்குகளெல்லாம்அவன் பக்கமே மேலேறிச் செல்கின்றன. அவன் செய்யும் சீர்திருத்த (ஸாலிஹான) செயல்களையெல்லாம்அவன் உயர்த்துகிறான். (இதன் மூலம் அவனது கண்ணியம், சுயமரியாதை உயர்த்தப்படுகிறது என்பது மய்யக் கருத்து) (அல்-குர்ஆன்: 35:10).கண்ணியம் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், ஏகனை ஏற்றவர்களுக்கே உரியது,எனினும், இந்நயவஞ்சர்கள் அறிந்து கொள்ளமாட்டார்கள். (அல்-குர்ஆன்: 68:8).நீர் கூறுவீராக! ஓ அல்லாஹ்! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ விரும்புகிறவருக்கு ஆட்சியைக் கொடுக்கிறாய். நீ விரும்புகிறவரிடமிருந்து ஆட்சியை அகற்றியும் விடுகிறாய்! நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்! இழிவாக்குகிறாய்! நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன. அனைத்து பொருட்களின் மீதும் நீ ஆற்றலுள்ளவன். (அல்-குர்ஆன்: 3:26)
அவர்களுடைய (விரோதமான) பேச்சு உம்மை சஞ்சலப்படுத்த வேண்டாம்; ஏனெனில் நிச்சயமாக அனைத்து (வல்லமையும்) கண்ணியமும் அல்லாஹ்வுக்கே உரியது; அவனே (யாவற்றையும்)செவியுறுபவன், நன்கறிபவன். (அல்-குர்ஆன்: 10:65).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக