சனி, 2 ஆகஸ்ட், 2014

துவக்கத்தில் ஒரு தூசுப்படலமாக இருந்தவன்தான் !

நிழல் தேடாதே
உன் நிழலில்
ஒரு ஊரையே நிற்கவை !

முட்களில்
மோதிக் கிழியாதவனுக்குப்
பூக்களைத்
தடவும் தகுதி கிடையாது !

மகிழ்ச்சியாய்ச்
சிரி கவலைகளைப்
பிய்த்துக் காற்று
மண்டலத்திற்கு அப்பால் வீசு !

எதைக்
கண்டும் பிரமிக்காதே
பிரமிப்பைப்போல்
ஒரு பின்னடைவே கிடையாது !

தோல்வி
என்பது சிந்திக்கத்
தெரியாதவனின்
சித்தாந்தம் !

நிலாவைத்
தொட்டது மூன்று
தோல்விகளுக்குப் பிறகு தான் !

நீ
எழுந்தால்
ஒரு எட்டு வந்து பார்க்காதவன்
நீ
விழுந்தால்
விழுந்து விழுந்து விசாரிப்பான் கவனி !

இளைஞனே
இரைப்பையையும்
நம்பிக்கையையும்
காலியாக விடாதே !

நடக்குமா
என்ற கேள்வி-உன்
நம்பிக்கைக்
கோபுரத்தின்
அத்திவாரத்தில் விழுந்த கடப்பாறை !

உலகை
உலுக்கி உலுக்கி
எடுத்தவனெல்லாம்
துவக்கத்தில்
ஒரு தூசுப்படலமாக இருந்தவன்தான் !  

# படித்ததில் பிடித்தது #

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக